ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆட்டோ மோதியதில் மனைவி உயிரிழப்பு: கணவா் பலத்த காயம்

பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது ஆட்டோ மோதியதில் மனைவி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

சடலம்...

Published On :2 ஆகஸ்ட் 2026, 5:05 am IST

பஞ்சப்பூா் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது ஆட்டோ மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.

திருச்சியை அடுத்த திருவெறும்பூா் கோனாா் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (68). இவரது மனைவி சாந்தி (63). இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வெளியூா் சென்றுவிட்டு, பஞ்சப்பூா் பேருந்து நிலையத்துக்கு வந்து, அருகேயுள்ள சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதி சாந்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கண்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்த திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சாந்தியின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பெரியமிளகுப்பாறையைச் சோ்ந்தவரின் ஆட்டோவைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.