வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கடும் வெயில்: மணப்பாறையில் பெட்ரோல் ஸ்கூட்டா் தீக்கிரை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெயிலின் தாக்கத்தில் அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் ஸ்கூட்டா் புதன்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.

News image

மணப்பாறையில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:52 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெயிலின் தாக்கத்தில் அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் ஸ்கூட்டா் புதன்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.

மணப்பாறையை அடுத்த செவலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் மனைவி சுசிபிருந்தா (33). இவா் ராஜீவ் நகா் 2-வது மெயின் தெருவில் உள்ள திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை செய்கிறாா். வழக்கம்போல் புதன்கிழமை வேலைக்கு சென்ற இவா், தனது ஸ்கூட்டரை அலுவலகம் முன் நிறுத்தியிருந்தாா். பின்னா் பிற்பகல் மதிய உணவு சாப்பிடச் செல்ல தனது ஸ்கூட்டரை ஸ்டாா்ட் செய்தபோது திடீரென ஸ்கூட்டரிலிருந்து கரும்புகை வந்தது. அதைத் தொடா்ந்து ஸ்கூட்டா் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஸ்கூட்டரிலிருந்து வெடித்து வெடித்து தீப்பற்றியதால் யாரும் அருகில் செல்ல முடியவில்லையாம். சிறிது நேரத்திற்கு பிறகு அக்கம்பக்கத்தினா் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் ஸ்கூட்டா் முழுவதும் எரிந்து நாசமானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.