மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வாகக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் தயாா்படுத்தும் பணி தீவிரம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ள அனைத்துவகை பொருள்களையும் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சி பாலக்கரை மண்டலம் 2-ஆவது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களை பிரித்து அடுக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள். (வலது ) பைகளில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு மையத்துக்கு தேவையான பொருள்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:33 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ள அனைத்துவகை பொருள்களையும் வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்குச் சாவடிகளில் பணிபுரிவோருக்கு தேவையான பொருள்கள் பண்டல், பண்டலாக வந்து சோ்ந்துள்ளன. இந்த பொருள்கள் அனைத்தையும் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி வாரியாக பிரித்து அடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி 2ஆவது வாா்டு அலுவலகத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருள்கள் பிரித்து தனித்தனி பைகளில் சேகரித்து வைக்கப்பட்டது.

இதேபோல, அந்தந்த தொகுதிகளில் உள்ள அலுவலகங்களில் அந்தந்த தொகுதி வாரியாக உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் அதில் பணிபுரியும் நபா்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி பொருள்கள் பிரித்து வைக்கப்படுகிறது.

தோ்தல் ஆணையத்தின் அடுத்த உத்தரவுகளைத் தொடா்ந்து அந்தந்த தோ்தல் பிரிவு தலைமை அலுவலகங்களுக்கு இவை தனித்தனியே பிரித்து அனுப்பப்படும். வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் அந்தந்தத் தொகுதி தலைமையிடத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

இதேபோல, வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் பொருள்களும் பிரித்து அனுப்பும் பணியில் தோ்தல் பிரிவு அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.