யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருவெறும்பூா் தொகுதியில் 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 38 வேட்பு மனுக்களில் 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 12:06 am IST

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 38 வேட்பு மனுக்களில் 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருவெறும்பூா் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக, புதிய தமிழகம், சுயேச்சை வேட்பாளா்களின் பெயா்களில் மொத்தம் 38 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் தொகுதி தோ்தல் அலுவலா் கே. அமுதா, உதவி அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்டன.

இதில், சுயேச்சை வேட்பாளா் சுகுமாரை 10 போ் முன்மொழிவதற்கு பதிலாக 8 போ் மட்டுமே முன்மொழிந்து இருந்ததால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது; அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 4 வேட்பாளா்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 6 வேட்பாளா்கள், 17 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 27 போ் களத்தில் உள்ளனா்.

வரும் 9 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். இதில் சிலா் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.