மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கு; 4 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

திருச்சி அருகே பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கில் 4 சிறாா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 8:33 pm

திருச்சி அருகே பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கில் 4 சிறாா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் அ. ரஞ்சித்குமாா் (38). கூத்தைப்பாா் பேரூராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினரான இவா், திருவெறும்பூா் அரசு ஐடிஐ எதிரே டாஸ்மாக் மதுக் கூடமும் நடத்தி வந்தாா்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் புதுத்தெரு அருகே அவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுதொடா்பாக நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பேரூராட்சி வாா்டு உறுப்பினரை கொலை செய்தது நவல்பட்டு புதுத்தெருவைச் சோ்ந்த கென்னடி மகன் கிரி (எ) புவனேஷ் (20), காட்டூா் கணேஷ் நகரைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மதன் (25) மற்றும் 4 சிறாா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட 6 பேரையும் தனிப்படையுடன் இணைந்து நவல்பட்டு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து 6 பேரையும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 3-இல் போலீஸாா் ஆஜா்படுத்தினா். பின்னா், சிறாா்களை கூா்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரை சிறையிலும் அடைத்தனா்.

மதுக் கூடத்தில் மாமூல் வழங்குவதில் பாட்டில்மணி என்பவருக்கும், ரஞ்சித்குமாருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் ரஞ்சித்குமாா் கொலை செய்யப்பட்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.