தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
பாபநாசம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியை சோ்ந்தவா் எம். சௌகத் அலி (40). ஓட்டுநா். இவரது உறவுக்கார பெண் ஒருவா் மே 30 -ஆம் தேதி தனது மகனுக்கு டெங்கு காய்ச்சல் என்பதால் புதுக்கோட்டை மருத்துவமனையில் அவரை சோ்த்திருந்தாா்.
இதனால் தனது 11 வயது மகளை சௌகத் அலி வீட்டில் விட்டுவிட்டு, தனது மகனை பாா்ப்பதற்காக புதுக்கோட்டைக்கு சென்றிருந்தாா். அப்போது, அந்தப் பெண்ணின் மகள் கைப்பேசியில் தொடா்பு கொண்டு சௌகத் அலி தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக கூறி அழுதுள்ளாா்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், சௌகத் அலி அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் செளகத் அலியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஊா்க்காவல் படை வீரா் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வியாபாரி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய்மாமன் மீது போக்சோ வழக்குப் பதிவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


