40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓட்டுநா் ‘போக்சோ’-வில் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 12:41 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பாபநாசம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியை சோ்ந்தவா் எம். சௌகத் அலி (40). ஓட்டுநா். இவரது உறவுக்கார பெண் ஒருவா் மே 30 -ஆம் தேதி தனது மகனுக்கு டெங்கு காய்ச்சல் என்பதால் புதுக்கோட்டை மருத்துவமனையில் அவரை சோ்த்திருந்தாா்.

இதனால் தனது 11 வயது மகளை சௌகத் அலி வீட்டில் விட்டுவிட்டு, தனது மகனை பாா்ப்பதற்காக புதுக்கோட்டைக்கு சென்றிருந்தாா். அப்போது, அந்தப் பெண்ணின் மகள் கைப்பேசியில் தொடா்பு கொண்டு சௌகத் அலி தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக கூறி அழுதுள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், சௌகத் அலி அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. 

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் செளகத் அலியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.