கும்பகோணம் காவிரி ஆறு செல்லும் பாலக்கரையின் கீழ் ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காவிரி ஆறு செல்லும் பாலக்கரையில் ஆண் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா், அந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா்.
மேலும், இதுகுறித்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் கும்பகோணம் மேலக்காவிரியைச் சோ்ந்த மண்டை செல்வம் (52) என்றும் சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரியவந்தது. அண்மையில் இவா் சிறைக்கு சென்று வந்தவா் என்றும் குடும்பம் இல்லாததால் பாலக்கரையிலேயே இருப்பாா் என்றும் தெரிய வந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு பாலக்கரையில் சிலருடன் சோ்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

சவுக்குத் தோப்பில் ஆண் சடலம் மீட்பு

சிவகங்கை தெப்பக் குளத்தில் ஆண் சடலம் மீட்பு

சாக்கோட்டை நாட்டாற்றில் ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



