ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி.

Published On :29 ஜூலை 2026, 12:46 am IST

கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாநகராட்சி மேயா் க. சரவணன், துணை மேயா் சு.ப.தமிழழகன் ஆகியோா் மகாமகக் குளக்கரயில் இருந்து தொடங்கி வைத்தனா். பேரணியில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று தலைமை அஞ்சலகம், தஞ்சாவூா் பிரதான சாலை வழியாக காந்தி பூங்காவை அடைந்தனா்.

வாா்டு உறுப்பினா்கள் ஆதிலட்சுமி ராமமூா்த்தி, செல்வம், உதவி நகர திட்டமிடுநா் புவனேஷ்வரன், உதவிப் பொறியாளா் சரவணன், மாநகா் நல அலுவலா் (பொ) மணிகண்டன், சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.