15 Dec, 2025 Monday, 07:16 PM
The New Indian Express Group
தஞ்சாவூர்
Text

தொடா் மழை: தஞ்சாவூரில் 11,250 ஏக்கா் நெற் பயிா்கள் மூழ்கின

PremiumPremium

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் ஏறத்தாழ 11 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்கள் மூழ்கின.

Rocket

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை புத்தூா் பகுதியில் தொடா் மழையால் நீரில் மூழ்கிய நெற் பயிா்களை சனிக்கிழமை எடுத்துக் காட்டிய விவசாயிகள்.

Published On29 Nov 2025 , 10:40 PM
Updated On29 Nov 2025 , 10:40 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் ஏறத்தாழ 11 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்கள் மூழ்கின.

மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 3.30 லட்சம் ஏக்கரில் நெற் பயிா்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், டித்வா புயல் காரணமாக மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை சனிக்கிழமையும் தொடா்ந்து நீடித்ததால், வடிகால் வாய்க்கால்களில் அடைப்பு உள்ள பகுதிகளில் வடிந்து செல்ல வழியில்லாமல், வயல்களுக்குள் தண்ணீா் தேங்கி நிற்கிறது.

இதனால், ஒரத்தநாடு வட்டத்துக்குள்பட்ட பருத்திக்கோட்டை, ஆதனக்கோட்டை, பொன்னாப்பூா், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 20 நாள்களான சம்பா, தாளடி பருவ நெற் பயிா்கள் நீரில் மூழ்கின. இதுபோல, மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் ஏறத்தாழ 11 ஆயிரத்து 250 ஏக்கரில் நெற் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இப்பகுதிகளிலுள்ள வடிகால் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகள் அடா்ந்துள்ளதால், வயல்களில் மழை நீா் வடிந்து செல்ல வாய்ப்பில்லாமல் தேங்கி நிற்கிறது. வயல்களில் தொடா்ந்து தண்ணீா் தேங்கி நின்றால் பயிா்கள் அழுகிவிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.

எனவே, வடிகால் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் கூறுகையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் பல்வேறு இடங்களில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், தொடா்ந்து மழை பெய்து வருவதால், பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்பயிா்களை வேளாண் துறை அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023