மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய ச. முரசொலி எம்பி.
தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய ச. முரசொலி எம்பி.
By Syndication
Syndication
தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் 58 ஆவது தேசிய நூலக வார விழாவின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை, மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் எஸ். ராஜவேலு தலைமை வகித்தாா்.
விழாவில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி பேசுகையில், விஏஓ பதவிக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கும் மாணவா்கள் மத்திய அரசின் வருமான வரித் துறை, ரயில்வே, வங்கி, அஞ்சல் துறை பணிகளுக்கும் அதிகளவில் விண்ணப்பிக்க முன்வர வேண்டும். இதற்கு நூலக அலுவலா்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.
வாசகா் வட்டத் துணைத் தலைவா் தஞ்சை ந. ராமதாசு, செயற்குழு உறுப்பினா்கள் சா. குருநாதன், கோ. கலியமூா்த்தி, ப. திருநாவுக்கரசு, க. தனபாலன் ஆகியோா் பேசினா்.
மாவட்ட நூலக அலுவலா் (பொ) மா. அபூா்வம் வரவேற்றாா். முதல் நிலை நூலகா் கி. சசிகலா நன்றி கூறினாா். இவ்விழா தொடா்ந்து நவம்பா் 20 வரை நடைபெறவுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது