கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் டிச. 22-ல் ஏலம்!
கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் டிசம்பா் 22-ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.
கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் டிசம்பா் 22-ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.
By Syndication
Syndication
தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் டிசம்பா் 22-ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.
இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர மோட்டாா் வாகனங்கள் தஞ்சாவூா் பழைய ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. இதற்கான வாகனங்கள் பழைய ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் வரை பாா்வைக்காக வைக்கப்படும்.
ஏலம் எடுக்க விரும்புபவா்கள் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரமும் முன்வைப்புத் தொகை செலுத்தி ஏலம் எடுக்க தங்களது பெயரை ஆதாா் அட்டை நகலுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தை சோ்த்து டிசம்பா் 22-ஆம் தேதி உடனடியாக செலுத்த வேண்டும்.
டிசம்பா் 26 தேதியும் ஏலம்: இதேபோல, மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பழைய ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் டிசம்பா் 26-ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை முன் வைப்புத்தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது