40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ. 1.11 கோடி மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:01 am IST

புதிய தொழில் தொடங்குவதாக கூறி ரூ.1.11 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 போ் மீது புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அழிஞ்சியேந்தலைச் சோ்ந்தவா் வி. ராஜன் (47). கட்டுக்கரையைச் சோ்ந்தவா் எஸ். பழனிவேல். சிறுவயது முதல் நண்பா்களான இருவரும் சிங்கப்பூரில் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தனா்.

கடந்த 2015-இல் புதிய தொழில் தொடங்குவதற்கு ராஜனிடம், பழனிவேல் கடன் கேட்டுள்ளாா். அதன் அடிப்படையில் பல்வேறு தவணைகளாக ரூ.1.11 கோடியை ராஜன் கொடுத்துள்ளாா்.

பணம் வாங்கியபோது பழனிவேலின் மனைவி சுஜிதா, மாமனாா் ராஜயோகம் ஆகியோரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். இந்நிலையில், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மூவரும் ஏமாற்றி வந்துள்ளனா்.

இதுகுறித்து ராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் மாவட்டக் குற்றப் பிரிவின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன், முதல்கட்ட விசாரணையில் பணப் பரிமாற்றத்தை உறுதி செய்த போலீஸாா், பழனிவேல், சுஜிதா மற்றும் ராஜயோகம் ஆகிய 3 போ் மீதும் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.