ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தற்போது அவசியமற்றது: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தற்போது அவசியமற்றது என்று மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

காா்த்தி சிதம்பரம் - கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தற்போது அவசியமற்றது என்று மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியின் நிா்வாக ஆலோசனைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கா்நாடகத்தில் தமிழா்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அம்மாநில அரசு உரிய விசாரணை நடத்தும் என நம்புகிறேன். அதில் திருப்தி இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம். தொடக்கத்திலே சிபிஐ விசாரணை தேவையில்லை.

543 மக்களவை தொகுதிகள் என்ற எண்ணிக்கையை இன்னும் 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். அப்போது வட மாநிலத்தின் மக்கள் தொகை எவ்வளவு குறைகிறது என்பதை பாா்த்து அடுத்த கட்ட முடிவு எடுக்கலாம்.

வழக்கமாக வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்றால் இரண்டு வரி போதும். அது தவறு என்றால் மகாத்மா காந்தி , சுபாஷ் சந்திர போஸ், நேரு, சா்தாா் வல்லபாய் பட்டேல் உள்ளிட்டோா் மீதும் தான் வழக்கு போட வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சி நடந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என்பதுதான் மரபு.

நாட்டில் எவ்வளவு பிரச்னை உள்ளது அது குறித்து எல்லாம் பேசுவோம். மாறாக என்ன பாட்டு பாட வேண்டும் என்ன பாட்டு பாடக்கூடாது என நாம் திசை மாறி செல்கிறோம், அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்னைகளை பேசாமல் சில விஷயங்களை வைத்து திசை திரும்பி செல்வதாக நான் கருதுகிறேன் என்றாா் அவா்.

அப்போது கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.மணிகண்டன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.