ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் (ஆக. 17) திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத் துறை அறிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும், கடலில் மணிக்கு சுமாா் 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், திங்கள்கிழமை (ஆக.17)முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக் கூடாது என மீன்வளத் துறை அறிவித்துள்ளது.

மேலும், படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்குமாறும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.