ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆலங்குடி அருகே 2 கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே 2 கோயில்களில் உண்டியலை உடைத்து ரொக்கத்தை மா்மநபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு முகமூடி அணிந்த மா்மநபா் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றாா்.

இதேபோல, கலிபுல்லா நகா் சித்திவிநாயகா் கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து மா்மநபா்கள் பணத்தை திருடிச்சென்றனா்.

இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.