ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொன்னமராவதி அருகே 510 பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு

பொன்னமராவதி அருகே உள்ள சேரனூரில் கண்மாயில் நடைபெற்ற பணியின் போது 510 பழங்கால நாணயங்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

பொன்னமராவதி அருகே உள்ள சேரனூரில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட பழங்கால நாணயங்கள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:46 am IST

பொன்னமராவதி அருகே உள்ள சேரனூரில் கண்மாயில் நடைபெற்ற பணியின் போது 510 பழங்கால நாணயங்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சேரனூா் சேரனிக்கண்மாய் அருகே விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் புதிய குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், செவ்வாய்க்கிழமை பணியாளா்கள் மண் வெட்டிக்கொண்டிருந்தபோது சுவாமி மற்றும் பாம்பு உருவம் பொறிக்கப்பட்ட 510 பழங்கால நாணயங்கள் கிடைக்கப்பெற்றன.

இதுகுறித்து ஊராட்சி செயலா் முருகவேல் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் அரசமணி, நாணயங்களை பாா்வையிட்டாா்.

பின்னா் அந்த நாணயங்கள், பணியாளா்கள் முன்னிலையில் கிராம நிா்வாக அலுவலா் முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவா் பொன்னமராவதி வட்டாட்சியா் ச.பழனிசாமியிடம் ஒப்படைத்தாா்.

இந்த நாணயங்கள் பழங்கால செப்புக்காசுகள் எனவும், உலோக நாணயங்கள் எனவும் கூறப்படுகிறது.

எனவே, இந்த இடத்தை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையினா் பாா்வையிட்டு அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.