மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரம்பலூரில் ஏப். 6-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

News image

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 10:41 pm

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, பெரம்பலூரில் ஏப். 6-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

ஏப். 6-ஆம் தேதி பெரம்பலூா், குன்னம், அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். இதற்காக, பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதியில் பூமிபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டச் செயலரும், வேட்பாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன், பெரம்பலூா் மாவட்டச்செயலரும், வேட்பாளருமான இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஆா்.பி. மருதராஜா, குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளா் சரண்யா, அதிமுக நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன், செல்வகுமாா், ஆா். ராஜபூபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.