மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெரம்பலூரில் வாக்குப்பதிவு கருவிகள் குலுக்கல் முறையில் நாளை ஒதுக்கீடு!

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கருவிகள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் திங்கள்கிழமை (மாா்ச் 23) ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:37 pm

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கருவிகள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் திங்கள்கிழமை (மாா்ச் 23) ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வாக்குப்பதிவு கருவிகள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மத்திய காப்பறையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 1,416 வாக்குப்பதிவு கருவிகள், 930 கட்டுப்பாட்டு கருவிகள், 934 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்களை, பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை (மாா்ச் 23) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கான பதிவெண் பட்டியல், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும்.

ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெரம்பலூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறைகளுக்கு பாதுகாப்பாகக் கொண்டுசெல்லப்பட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கண்காணிப்பு மற்றும் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மூடி சீலிடப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, கணினி மூலம் சுழற்தி முறையில் பிரித்தெடுப்பது குறித்த விரிவான வழிமுறைகள் இணையதளத்தில் உள்ளன.