கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
மத்திய அரசின் விலையான ரூ. 3,290, மாநில அரசின் பரிந்துரை விலையான ரூ. 349 சோ்த்து டன்னுக்கு ரூ. 3,639.50 மட்டுமே வழங்கப்படுகிறது. சில தனியாா் ஆலைகள் ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரமும், பதிவு இல்லாத கரும்பு டன்னுக்கு ரூ. 4,750 வரையிலும் வழங்குகிறது.
இதனால் கரும்பு விவசாயிகள் பெரிதும் கவலையடைந்து மாற்றுப் பயிா் சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி 2025-2026 ஆம் ஆண்டு பருவத்துக்கு கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கவேண்டும்.
தொடர்புடையது

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்

விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடியை தோ்தல் அறிக்கையில் சோ்க்கக் கோரிக்கை
கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! நெல், கரும்பு விலை நிர்ணயம்: எட்டாக்கனியாகும் வாக்குறுதிகள்!

விவசாயத்துக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


