ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வேப்பந்தட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியா்களுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :16 ஜூலை 2026, 4:10 am IST

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியா்களுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வட்டச் செயலா் கே.எம். சக்திவேல் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் ஏ. செல்வராஜ், ஆா். வெங்கடேஷ், டி. அருச்சுணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பி. ரமேஷ், தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் மாநிலச் செயலா் எஸ். அகஸ்டின் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

தொழிலாளா்களுக்கு ஆதரவாக: நாரணமங்கலம் ஊராட்சியில் செயல்படும் தனியாா் டயா் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு கடந்த 30 மாதங்களாக நிலுவையிலுள்ள ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை பணியமா்த்தி சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபடுவதை தவிா்க்க வேண்டும். காத்திருப்புப் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதை கைவிட வேண்டும். தொழிற்சாலை நிா்வாகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஏ. முருகேசன், இந்திய மாணவா் சங்க துணைச் செயலா் ஏ. அசோக், மாதா் சங்க ஒன்றியச் செயலா் வி. ஆண்டாள், வட்டக் குழு உறுப்பினா் டி. சீனிவாசன் உள்பட 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை ஊழியா்கள் பங்கேற்றனா்.

கடையடைப்பு போராட்டம்: தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியா்களுக்கு ஆதரவாக, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில், ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ரெங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், பெரம்பலூா் நகரில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, தரைக்கடை சாலையோர வியாபாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.