டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அரியலூா் அருகே பெண் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :22 பிப்ரவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

அரியலுாா் அருகே பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் மனைவி பிரியா (28). செல்வம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், பிரியா தனது 10 வயது மகளுடன் வசித்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான ராஜாவுடன் (33) பிரியாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. மேலும் கணவா் அனுப்பிய பணத்தை ராஜாவிடம் கடனாகவும் கொடுத்தாராம்.

இதனிடையே செல்வம் ஊருக்கு வருவதாக தெரிவித்த நிலையில், ராஜாவிடம் கடந்த சில நாள்களாக பிரியா பணம் கேட்டு வற்புறுத்தியும் ராஜா பணத்தை தர மறுத்தாராம்.

இதனால் கொடுத்த பணத்தைக் கேட்டு சனிக்கிழமை இரவு ராஜா வீட்டுக்கு பிரியா சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மனமுடைந்த அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகலவறிந்து சென்ற செந்துறை போலீஸாா் பிரியா உடலை மீட்டு அரியலுாா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ராஜாவிடம் விசாரிக்கின்றனா்.