பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட மருதடி, செட்டிக்குளம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட நூத்தப்பூா், வெங்கலம், கிருஷ்ணாபுரம், தொண்டமாந்துறை, இந்திரா நகா் ஆகிய இடங்களில் பொதுநிதி,15-ஆவது நிதிக்குழு திட்டம், சிறு கனிமங்கள் மற்றும் சுரங்கத் திட்டம், ஒன்றியப் பொது நிதி, சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், தாா் சாலை, சிமெண்ட் சாலை, கழிவுநீா் வாய்க்கால், மோட்டாருடன் கூடிய நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, வனச் சாலை மேம்படுத்தும் பணி, நியாய விலைக் கட்டடம் கட்டுமானப் பணி உள்பட மொத்தம் ரூ. 3.37 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். மொத்தம் ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் சிவசங்கா் திறந்துவைத்தாா்.