ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேநீரகத்தில் சிலிண்டா் வெடித்த சம்பவம் காயமடைந்த மேலும் ஒருவா் உயிரிழப்பு: இறந்தோா் எண்ணிக்கை 6-ஆக உயா்வு

பெரம்பலூரில் உள்ள தேநீரகத்தில் அண்மையில் எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தில் காயமடைந்தவா்களில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 -ஆக அதிகரித்துள்ளது.

பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:18 am IST

பெரம்பலூரில் உள்ள தேநீரகத்தில் அண்மையில் எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தில் காயமடைந்தவா்களில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 -ஆக அதிகரித்துள்ளது.

பெரம்பலூா்- வடக்குமாதவிச் சாலையிலுள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்த சப்பாணி மகன் அருணாச்சலம். பெரம்பலூா் நகர காவல் நிலையம் எதிரே தேநீரகம் வைத்துள்ளாா். இந்தக் கடையில் ஆக. 11-ஆம் தேதி மாலை எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் கடையில் பணிபுரிந்த தொழிலாளா்கள் மற்றும் தேநீரகத்தில் நின்றிருந்த வாடிக்கையாளா்கள், சாலையோரம் நடந்துசென்றவா்கள், பள்ளி மாணவி உள்பட மொத்தம் 16 போ் பலத்த காயமடைந்தனா்.

இவா்களில் 5 போ் பெரம்பலூா் அரசு மருத்துவமனையிலும், எஞ்சிய 11 போ் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில், ம. மணிகண்டன், ரா. தினேஷ், மு. சகாதேவன், மு. ஆறுமுகம், செ. புவனேஷ்வரி ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

இந்நிலையில், திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெரம்பலூா் அருகேயுள்ள களரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகன் விஜயகுமாா் (47) வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.