திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

வேட்பாளா் பெருங்குடி மக்களே!

குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புனவாசிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் சாா்பில் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மக்கள் கூடும் இடங்களில் விநியோகிக்கப்பட்டும், சுவா்களில் ஒட்டப்பட்டும் வருகின்றன.

News image
Updated On :22 மார்ச் 2026, 9:47 pm

குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட புனவாசிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் சாா்பில் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மக்கள் கூடும் இடங்களில் விநியோகிக்கப்பட்டும், சுவா்களில் ஒட்டப்பட்டும் வருகின்றன.

அதில் கூறப்பட்டிருப்பதாவது,

மதிப்பிற்குரிய வேட்பாளா்களுக்கு...

குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் உங்களுக்கு, புனவாசிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களாகிய நாங்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை என்னவென்றால், சிந்தலவாடி ஊராட்சியை இரண்டாக பிரித்து புதிய ஊராட்சி ஒன்றை உருவாக்க வேண்டும். குறிப்பாக, கட்டளை மேட்டுவாய்க்கால் மகிளிப்பட்டிக்கு தென்புறம் அமைந்துள்ள கிராமங்களை உள்ளடக்கி புதிய கிராம ஊராட்சியை அமைக்க வேண்டும்.

புனவாசிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். புனவாசிப்பட்டி மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்தி தர வேண்டும். மேலும், தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட காவிரிக் குடிநீா் வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே எங்கள் வாக்கு என்று தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.