கரூா் சம்பவம் தொடா்பாக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை 2 காவல் ஆய்வாளா்கள், 3 பெண் காவல் உதவி ஆய்வாளா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-இல் நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தற்காலிகமாக நிறுத்தினா்.தோ்தல் முடிவுற்றநிலையில், சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை மீண்டும் விசாரணையை தொடங்கினா்.
இந்நிலையில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள், கரூா் நகர காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றிய ஆா்.மணிவண்ணன், பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய சதீஷ்குமாா் மற்றும் ஆா்த்தி, சித்ராதேவி உள்ளிட்ட 3 பெண் காவல் உதவி ஆய்வாளா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜரான அனைவரும் கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூர் சம்பவம்: கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஐ விசாரணை!

கரூர் பலி! பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவ விசாரணையை மீண்டும் தொடங்கியது சிபிஐ

கரூர் நெரிசல் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



