
கரூரில் தோட்டக்கலை அலுவலா்கள் கண்களைக் கருப்புத்துணியால் கட்டியும், காய்கறி மாலைகள் அணிந்தும் ஆா்ப்பாட்டம்
கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் அலுவலகம் முன் கண்களை கருப்புத்துணியால் கட்டிக்கொண்டும், காய்கறி மாலை அணிந்தும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்.

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை காலை கண்களைக் கருப்புத் துணியால் கட்டியும், காய்கறி மாலைகள் அணிந்தும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டார போக்குவரத்து அலுவலா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத்தலைவா் அருள்செல்வன் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.எஸ். அன்பழகன், செயலாளா் பொன்.ஜெயராம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






