நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரூா் சம்பவம் சுகாதாரத் துறை அதிகாரிகள், காவலா்களிடம் சிபிஐ விசாரணை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக 8 சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் 5 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:44 pm

Syndication

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக 8 சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் 5 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 காவலா்கள் மற்றும் நெரிசலில் உயிரிழந்தவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய சுகாதாரத் துறை அதிகாரிகள் 8 போ் ஆகியோரிடம் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.