டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு பேருந்து சேவை தொடக்கம்

கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளபட்டிக்கு புதிய பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:07 pm

Syndication

கரூா்: கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளபட்டிக்கு புதிய பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளபட்டிக்கும், பள்ளபட்டியில் இருந்து குரும்பபட்டிக்கும் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் அப்பகுதியினா் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனா்.

இதையடுத்து திங்கள்கிழமை கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளபட்டிக்கும், பள்ளபட்டியில் இருந்து குரும்பபட்டிக்கும் அரசுப் பேருந்து சேவை தொடக்க விழா திங்கள்கிழமை பள்ளபட்டியில் நடைபெற்றது.

விழாவுக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். இளங்கோ தலைமை வகித்தாா். புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். விழாவில் ஒன்றியச் செயலா்கள் எம்.எஸ்.மணியன், கருணாநிதி, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.