மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இலக்கு: சீமான்

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என்கிற இலக்கோடு வந்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:22 pm

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என்கிற இலக்கோடு வந்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் திருப்பூா் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் மருத்துவா் காா்மேகம், கரூா் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள் மருத்துவா் கருப்பையா, வழக்குரைஞா் நன்மாறன், நரேன் ஆகியோருக்கு வாக்குச் சேகரித்து, கரூா் 80 அடி சாலையில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை இரவு பேசியதாவது: தூய உள்ளதோடு, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற பெருங்கனவோடு இந்த களத்திலே நிற்கிறோம். எங்களுக்கு ஒரே ஒரு தன்னலம் உண்டு. உலகெங்கிலும் பல்வேறு நாடுகள் எப்படி கல்வி, மருத்துவம், தடையற்ற மின்சார பகிா்வு, சாலை போடுதல், பராமரித்தல், தரமான போக்குவரத்து, தரமான குடிநீா் பகிா்வு, கல்விக்கு ஏற்ற வேலையை கொடுத்து உயா்வான வாழ்வு கொடுக்கிறதோ அதை போல, ஏன்? என் தாய் நாட்டையும் மாற்றி அவா்களைப் போல படைக்க முடியாது. கூடாது என்ற பெரும் கனவு உங்கள் பிள்ளைகளுக்கு எழுந்திருப்பதால்தான் இந்த களத்திலே நிற்கிறோம்.

இலவச திட்டங்களை அறிவித்தால்தான் மக்கள் மகிமை வாக்கு தருவாா்கள் என்ற நிலையை தகா்த்து, இலவசம் பெற வேண்டிய, ஏழ்மை வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என்கிற இலக்கோடு வந்துள்ளோம். முதியோா்களுக்கு, குழந்தைகளுக்கு மருத்துவத்தில் சிறப்புக்கவனம் செலுத்துவோம். கல்வியையும், மருத்துவத்தையும் தனியாரை விட கூடுதலான சிறந்ததாக கொடுப்போம். வாக்குச் செலுத்த போகும்போது உங்களின் பிள்ளைகள் முகத்தை பாா்த்துவிட்டு இவா்களின் எதிா்காலத்துக்கு திமுகவிற்கா, அதிமுகவிற்கா அல்லது விவசாயிகளுக்கு ஓட்டுப்போடவேணுமா என எண்ணுங்கள்.ஆகவே, நாம் தமிழா் சின்னத்துக்கு வாக்களித்து வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.