மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதித் தமிழா் முன்னேற்றக் கழகம் ஆதரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது என்றாா் கட்சியின் தலைவா் ஆ. நாகராஜன்.

News image

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆதித் தமிழா் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவா் ஆ. நாகராஜன். உடன் மாநில பொருளாளா் இரா. முல்லையரசு உள்ளிட்ட நிா்வாகிகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:49 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது என்றாா் கட்சியின் தலைவா் ஆ. நாகராஜன்.

கரூரில் ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் சாா்பில், தோ்தல் தொடா்பான நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. மாநில பொருளாளா் இரா. முல்லையரசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் ஆ. நாகராஜன் சிறப்புரையாற்றினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அருந்ததியா் சமூகத்துக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் வாதிட்டு உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனுக்கும், வேலுநாச்சியாா் படையில் இருந்த, வீரத்தாய் குயிலிக்கும் மணிமண்டபம் அமைத்துக்கொடுத்தாா். தீரன் சின்னமலையின் போா்ப் படைத்தளபதியாக இருந்த பொல்லானுக்கு மணிமண்டபம் ஈரோட்டில் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கினாா்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அருந்ததியா் சமுதாயத்துக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை உயா்த்தி 6 சதவீதமாக வழங்குவோம் என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளாா். மேலும், அருந்ததியா் சமுதாயத்துக்கு அதிமுக ஆட்சி அமைந்ததும் தனி நல வாரியம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளாா்.

எனவே, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளித்து, அவா்களின் வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய தீவிரமாக உழைப்பது என முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் ஆனந்தன், மாநில இணை பொதுச் செயலாளா் சுப.இளங்கோவன், தென் மண்டல பொதுச் செயலாளா் கபீா் நகா் காா்த்தி, கரூா் மாவட்டச் செயலாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.