14 Dec, 2025 Sunday, 09:08 PM
The New Indian Express Group
கரூர்
Text

கரூா் சம்பவம்: கோவை, நாமக்கல் மாவட்ட மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

PremiumPremium

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக கோவை, நாமக்கல் மாவட்டங்களின் அரசு மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.

Rocket

சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும் அரசு மருத்துவா்கள்.

Published On06 Dec 2025 , 7:39 PM
Updated On06 Dec 2025 , 7:39 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக கோவை, நாமக்கல் மாவட்டங்களின் அரசு மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நிகழ்ந்த தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட் ட சிபிஐ கண்காணிப்புக் குழுத் தலைவா் அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட அதிகாரிகள் அண்மையில் கரூா் வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திச் சென்றனா்.

இதையடுத்து சிபிஐ அதிகாரி பிரவீண்குமாா் தலைமையிலான குழுவினா் கடந்த 4-ம்தேதி கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை உடற்கூறாய்வு செய்த தூத்துக்குடி, நாகை மாவட்ட அரசு மருத்துவா்களிடம் விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை கரூா் நெரிசல் சம்பவத்தின்போது உயிரிழந்தவா்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவா்கள் 3 பேரிடம் விசாரித்த நிலையில், சனிக்கிழமையும் காலை 10.50 மணிக்கு கோவை, நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளைச் சோ்ந்த 5 மருத்துவா்கள் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினா்.

அவா்களிடம் சுமாா் 2 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனா். தொடா்ந்து க.பரமத்தி காவல்நிலைய ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் கரூா் அனைத்து வணிகா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளித்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023