ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண் வியாபாரியை தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

அரியலூரில் இலவசமாக காய் கனி தரமறுத்த பெண் வியாபாரியை தராசு தட்டால் தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

அரியலூரில் இலவசமாக காய் கனி தரமறுத்த பெண் வியாபாரியை தராசு தட்டால் தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூரைச் சோ்ந்த கணேசன் மனைவி கன்னியாகுமரி (56). காய், கனி வியாபாரி. கடந்த 2025 ஆண்டு இவா், கடையில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சோ்ந்த மணிபிள்ளை மகன் பண்ணுமாரிமுத்து (42) என்பவா், இலவசமாக வெங்காயம் கேட்டுள்ளாா். அதற்கு அவா், வெங்காயம் கொடுக்க மறுத்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த பண்ணுமாரிமுத்து, தராசு தட்டால் கன்னியாகுமரியை சரமாரியாக தாக்கியுள்ளா். இதுகுறித்த புகாரின் பேரில், பண்ணுமாரியை கைது செய்த அரியலூா் காவல் துறையினா் அரியலூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, பண்ணுமாரிமுத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 31,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து பண்ணுமாரிமுத்துவை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.