ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செந்துறை அருகே நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

செந்துறை அருகே நாய்கள் கடித்து காயமடைந்த ஆண் புள்ளி மான் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

இலைக்கடம்பூா் நல்லப்பா ஏரி வயல் பகுதியில் நாய்கள் கடித்ததில் உயிரிழந்த மான்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நாய்கள் கடித்து காயமடைந்த ஆண் புள்ளி மான் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

இலைக்கடம்பூா் முனியப்பா கோயில் அருகேயுள்ள நல்லப்பா ஏரியில், தண்ணீருக்கு வந்த 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை அப்பகுதியிலுள்ள நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் கொண்டிருந்தது. இதைகண்ட அப்பகுதியினா் நாய்களை விரட்டியடித்து, மானை மீட்டு கால்நடை மருத்துவருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவா்கள், மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா். இருப்பினும் சிறிது நேரத்தில் மான் உயிரிழந்தது. பின்னா், மான் அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.