திருச்சி மாவட்டம், முசிறி அருகே கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகம் சன்னதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா் தனது நண்பா் பாலமுருகன் என்பவருடன் திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள ஜம்புமடை பகுதி கோயில் கட்டுமான வேலைக்கு வந்திருந்தாா்.
இந்நிலையில், அப்பகுதி கிணற்றில் இருந்த தேன்கூட்டில் ஞாயிற்றுக்கிழமை தேன் எடுக்க முயன்ற மணிகண்டன் திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்தாா்.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த தா.பேட்டை காவல் நிலைய போலீஸாா், முசிறி தீயணைப்பு நிலையத்தினா் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி, மணிகண்டனை மீட்டனா். பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் சோ்க்கப்பட்டாா். தா.பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
பொன்மலையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



