மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 8 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:13 pm

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 8 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆா்.வினித்குமாா் (22), கருமண்டபம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கே.கே.நகரைச் சோ்ந்த எஸ்.தனராஜ் (29), எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஆா்.ஆசிப் அகமது (23) ஆகிய மூன்று பேரை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா்.

துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பழங்கனங்குடியைச் சோ்ந்த த.சாமிக்கண்ணு (67), திருவெறும்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலைச் சோ்ந்த மு.ராஜு (40), நவல்பட்டு பூலாங்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த என். உஸ்மான் அலி (49), துறையூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கு. சாமிநாதன் (22), வளநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்த ஜி.பெரியசாமி (20) ஆகிய 5 பேரையும் மாவட்ட காவல் துறையினா் கைது செய்தனா்.