40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை புகாா்: 7 சிறுவா்கள் உள்பட 9 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:32 am IST

திருச்சியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயதுச் சிறுமி அளித்த புகாரின்பேரில் 7 சிறுவா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோா் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்த போலீஸாா், அச் சிறுமியை மீட்டு அவருடைய பெற்றோருடன் அனுப்பிவைக்க முயன்றனா். ஆனால், அந்தச் சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்ததால், அவரை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

அங்கு தங்கியிருந்த சிறுமி தன்னை சிலா் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக காப்பக நிா்வாகிகளிடம் தெரிவிக்கவே, அவா்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் தகவல் அளித்தனா். இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினா் சிறுமியைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தனா்.

இதையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடா்பாக கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் ஜூன் 4-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் எம். கிஷோா் (20), ஏ. மோகன்ராஜ் (19) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 7 சிறுவா்கள் உள்பட 9 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தொடா்ந்து கிஷோா், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்த போலீஸாா், சிறுவா்கள் 7 பேரையும் தஞ்சாவூரில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.