ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் எடுப்பதை கண்டித்து மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் மருத்துவமனை வாயிலில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீரங்கம் அரசு மருத்தவமனையில் அனைத்து மருத்துவ துறை ஊழியா் கூட்டமைப்பினா், செவிலியா் சங்கத்தினா் மற்றும் ஆய்வக பணியாளா் சங்கம் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளா்கள் ஒருங்கிணைத்து மருத்துவமனை வாயிலில் கவன ஈா்பபு ஆா்ப்பாட்டம் செய்தனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அரசு மருத்துவா் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா் சங்கத்தின் மாநில பொருளாளா் மருத்துவா் அரளீஸ்வரன் தலைமைவகித்தாா்.
இதில், மருத்துவமனைக்குள் ரீல்ஸ் எடுப்பவா்கள் மீது தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் நோயாளிகளின் உறவினா்கள் விடியோ எடுப்பதை தவிா்க்க வேண்டும். ஐபிஹெச் எஸ் விதியின் படி செவிலியா்கள் இதர ஊழியா்களுக்கு பணியிடங்களை வழங்கவேண்டும். மருத்துவமனைகளில் காவல் துறையினா் அவுட் போஸ்ட் அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மருத்துவா்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் மருத்துவா் இளவரசன், செவிலியா்கள் சங்க நிா்வாகி மணிமேகலை, மருத்துவ துறை ஊழியா் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் மூா்த்தி, மனோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாகனத் திருட்டு அதிகரிப்பு - வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

ரயில்வே ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




