உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனைக் கைதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
அரியலூா் உடையாா்பாளையம் இளையபெருமாநல்லூரைச் சோ்ந்தவா் த. சிவலிங்கம் (56). இவா் மீது, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த 2021 ஜூலை 14-ஆம் தேதி முதல் இருந்து வருகிறாா்.
இவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்து வந்துள்ளது. கடந்த மே 14-ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகளுக்கான பிரிவில் சிறை அதிகாரிகள் அனுமதித்தனா்.
இந்நிலையில், சிவலிங்கம் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அதிகாரி ராஜேஷ்கண்ணா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு
உடல்நலக் குறைவால் போக்ஸோ கைதி உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



