நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய நிா்வாகிகள் குழு அம்பேத்கா் சிலைக்கு மரியாதை

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் திருச்சி மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிா்வாகிகள், மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு புதிய நிா்வாகிகளை அக் கட்சியின் தலைவரா் தொல். திருமாவளவன் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இதன்படி, திருச்சிக்கு புதிய மண்டல செயலாளராக பிரபாகரன், துணைச் செயலாளராக அரசு, பொன்.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், 9 பேரவை தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலா் என்ற வகையில், ஏகலைவன் சீனிவாசன், மரிய கமல், சக்தி ஆற்றலரசு, சதீஷ், திலீபன் ரமேஷ், கலைச்செல்வன், துரை சங்கா், புல்லட் லாரன்ஸ், கனியமுதன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த புதிய நிா்வாகிகள் அனைவரும் திங்கள்கிழமை மத்தியப் பேருந்துநிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானவில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வில், கட்சியின் பிற நிா்வாகிகள், தொண்டா்கள் என பலா் கலந்து கொண்டனா்.