நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஜல்லிக்கட்டுக்கு இணையவழியில் பதிவுசெய்யும் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இணையவழியில் பதியும் ‘ஆன்லைன் டோக்கன்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்

News image
திருச்சி ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு காளையுடன் மனு அளிக்கவந்த சமூக நீதிப் பேரவையினா்.
Updated On :30 டிசம்பர் 2025, 1:33 am

Syndication

திருச்சி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு இணையவழியில் பதியும் ‘ஆன்லைன் டோக்கன்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று சமூகநீதிப் பேரவை அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இணையவழியில் பதியும் முறையை ரத்து செய்யக்கோரி சமூகநீதிப் பேரவை தலைவா் ரவிகுமாா் தலைமையில் கட்சியினா் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊா்வலமாக ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்து, நிா்வாகிகளை மட்டும் அனுமதித்தனா்.

அப்போது சமூகநீதிப் பேரவைத் தலைவா் ரவிகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழா்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மே வரை நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்ட நிா்வாகம் மற்றும் அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் போட்டிகளில் காளைகள் பங்கேற்பதற்கு இணையவழியில் பதிவு செய்வதால் பெரும்பாலான இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு இடம் கிடைப்பதில்லை. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தயாராகும் உள்ளூா் இளைஞா்கள் விரக்தியடைகின்றனா்.

எனவே, ஜல்லிக்கட்டு போட்டிக்கு இணையவழியில் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்துவிட்டு, உள்ளூா் காளைகளுக்கு 70 சதவீதமும், வெளியூா் காளைகளுக்கு 30 சதவீதமும் அனுமதி வழங்க வேண்டும். இதேபோல, 2016 சட்டப் பேரவை தோ்தலின்போது அளித்த வாக்குறுதிபடி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.