அண்மையில் தீபாவளிப் பண்டிகையின்போது வாகன ஓட்டிகளுக்கு வாகன நிறுத்தம் அமைத்துத் தர மாநகராட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, பர்மா பஜார் வியாபாரிகள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். இத்தனை நடவடிக்கைகள் நடைபெற்று வந்த போதிலும், "இந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட மாநகராட்சியின் நடவடிக்கையில் உள்ளது' என்ற பதில் வந்துகொண்டேதான் இருக்கிறது. மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் நியமனம் எப்போது செய்யப் போகிறீர்கள்? என மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கேட்டால், "மாநகராட்சியின் மொத்த வருவாயில் 49 சதம் வரைதான் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என்பதால், புதிய ஊழியர் நியமனம் செய்ய முடியவில்லை' எனப் பதிலளிக்கப்படுகிறது.