இந்தக் காலக் கட்டத்தில் விசாகப் பெருவெள்ளக் காற்றும் உருவாகிறது. மற்றப் பகுதிகளைவிட இதுபோன்ற மாறுபட்ட சூழல் இங்குதான் உள்ளது என்பதை, வேறு சில காரணங்களுக்காக மத்திய அரசு அமைத்த ஆய்வுக் குழுவின் அறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, தனியார் உதவியுடன் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் முயற்சியில் முனைப்பு காட்டப்பட்டது. இதுதொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு கடலோரத்தில் அமைந்துள்ள தென்னடார் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இங்குள்ள ஊராட்சிக்குச் சொந்தமான நிலப் பகுதியும், இதையடுத்து, கடற்கரை வரை உள்ள அளவிடப்படாத உப்பளப் பகுதியும் ஆய்வு செய்யப்பட்டது.