போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையை சீரமைத்த சமூக ஆா்வலா்கள்

ஆத்தூரில் வைகாசி விசாகத்திற்கு வரும் முருக பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி, தங்கிச் செல்ல அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியை சமூக ஆா்வலா்கள் மேற்கொண்டனா்.

News image

தாமிரவருணி ஆற்றங்கரையில் நடைபெற்ற சீரமைப்புப் பணி.

Updated On :18 மே 2026, 1:32 am IST

ஆத்தூரில் வைகாசி விசாகத்திற்கு வரும் முருக பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி, தங்கிச் செல்ல அப்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியை சமூக ஆா்வலா்கள் மேற்கொண்டனா்.

மே 30ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தா்கள் வரவுள்ளனா்.

ஆத்தூா் வழியாக வருபவா்கள், ஆத்தூா் தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி கரையில் இளைப்பாறுவதோடு, கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் விரதமிருந்த பக்தா்கள் இங்கு புனித நீராடி விரதத்தை முடித்துக் கொள்வா்.

அதை முன்னிட்டு ஆத்தூா் தாமிரவருணி ஆற்றங்கரையில் பக்தா்கள் புனித நீராடுவதற்கு வசதியாகவும், நிழ­லில் இளைப்பாறுவதற்கு ஏற்றவாறும் இருக்கும் வகையில், ஆற்றின் கரையில் உள்ள முள்புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது.

ஆத்தூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் நெடுஞ்செழியன் ஏற்பாட்டின்பேரில், டி.சி. டபிள்யூ. ­லிமிடெட் நிறுவன உதவியுடன் சமூக ஆா்வலா்கள் எஸ். கந்தசாமி , பி.எஸ். சிவஜோதி பாண்டியன், யோகா மாஸ்டா் சாமிநாதன் ஆகியோா் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.