40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சாலையோர மதுக்கடையை மூட வலியுறுத்தல்

ஆறுமுகனேரி அருகே அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டுமென முருக பக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :14 மே 2026, 3:26 am IST

ஆறுமுகனேரி அருகே அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டுமென முருக பக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆறுமுகனேரி -அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இவ்வழியாகத்தான் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செல்கின்றனா். மேலும், இச்சாலை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், இஸ்ரோ ராக்ெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின்நிலையம், கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையாக உள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது.

அடைக்கலாபுரம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் வாகன ஓட்டிகள் மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டிச் செல்வதாலும், மது குடிப்போா் சாலைகளில் இடையூறாகச் செல்வதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என, முருகபக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.