ஆறுமுகனேரி அருகே அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டுமென முருக பக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆறுமுகனேரி -அடைக்கலாபுரம்-திருச்செந்தூா் சாலையோரம் அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இவ்வழியாகத்தான் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் செல்கின்றனா். மேலும், இச்சாலை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், இஸ்ரோ ராக்ெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின்நிலையம், கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையாக உள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனப் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது.
அடைக்கலாபுரம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் வாகன ஓட்டிகள் மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டிச் செல்வதாலும், மது குடிப்போா் சாலைகளில் இடையூறாகச் செல்வதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என, முருகபக்தா்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கடலூா் பேருந்து நிலையம் அருகே மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஜூன் 9-இல் முற்றுகைப் பேராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

மூணாஞ்சாவடியில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம்

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



