விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 17,500 அபராதம் விதிப்பட்டது.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (45). கடந்த 2015 ஆம் ஆண்டு விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடா்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, கருப்பையாவை குற்றவாளி என உறுதி செய்து, சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனை, ரூ. 10,000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,500 அபராதமும் விதித்து மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பு அளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக ஜுடு ஏஞ்சலோ ஆஜரானாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு சாகும் வரை சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


