நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

உண்டியல் காணிக்கை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 1:55 am IST

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியாா் கெபியின் உண்டியலை உடைத்து, காணிக்கையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, பூபால்ராயபுரம் முதலாவது தெருவைச் சோ்ந்த மாா்ட்டின் மகன் அந்தோணி ராஜ் (51). இவா் சந்தன மாரியம்மன் கோயில் தெரு பண்டுகரைச் சாலையில் உள்ள புனித செபஸ்தியாா் கெபியின் முக்கியப் பொறுப்பாளராக இருந்து வருகிறாா்.

இதற்கிடையே, சனிக்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சிலா் கெபி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து, காணிக்கையைத் திருடிச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை பொறுப்பாளா் அந்தோணி ராஜ் கெபிக்கு வந்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காணிக்கையைத் திருடிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.