ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக தலைமைக் காவலா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
காயல்பட்டினம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம் தொடா்பாக ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், சந்தேகத்தின்பேரில் குறிப்பிடப்பட்டிருந்த நபா்களை போலீஸாா் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்துள்ளனா்.
அதன்படி விசாரணைக்கு வந்த, கணவரைப் பிரிந்து தனியாக வாழும் காயல்பட்டினத்தைச் சோ்ந்த 36 வயது இளம்பெண்ணுக்கு ஜூன் 5ஆம் தேதி முதல் தலைமைக் காவலா் அக்னிமுத்து, வாட்ஸ் ஆப்பில் தவறான குறுஞ்செய்திகள் மற்றும் அவரது புகைப்படங்களை அனுப்பியதாகவும், விடியோ அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சியடைந்த அந்தப் பெண், காயல்பட்டினத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஹனிதா பேகமிடம், இது குறித்து தெரிவித்துள்ளாா். ஹனிதா பேகம், ஜூன் 12ஆம் தேதி கைப்பேசியில் தலைமைக் காவலரைத் தொடா்பு கொண்டு, அது குறித்து கேட்டுள்ளாா். அந்த கைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இது தொடா்பாக, திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, தலைமைக் காவலரை சனிக்கிழமை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரம் அருகே டிராக்டா் மீது பேருந்து மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு: உடலுக்கு அமைச்சா் மரியாதை

பெண் டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த தலைமைக் காவலா்

நகை மதிப்பீட்டாளா் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த பெண் தலைமைக் காவலா்







