ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வழக்குகளில் ஆஜராகாத ரெளடி கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத ரெளடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 4:48 am IST

பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத ரெளடியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காமராஜபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முருகன் என்ற பாம்பே முருகன் (49). இவா் மீது ஆறுமுகனேரி காவல்நிலையத்தில், கொலை முயற்சி உள்பட 7 குற்ற வழக்குகள் உள்ளன.

வழக்குகளில் ஆஜராகாத நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் ரென்னீஸ் உத்தரவின்படி உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் ஆறுமுகனேரி கடைவீதியில் முருகனை கைது செய்தனா்.

இதையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.