ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருச்செந்தூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்செந்தூா் உடற்பயிற்சி கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மருத்துவா் செல்வன் ராஜசேகரனுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ’வீ த லீடா்ஸ்’ அமைப்பின் கட்டமைப்பு பொறியாளா் செந்தில் பலவேச கண்ணன்.

Published On :9 ஜூலை 2026, 12:03 am IST

திருச்செந்தூா் உடற்பயிற்சி கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஸ்டீலா ஸ்டீபன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக அன்னம் மருத்துவமனை மருத்துவா் செல்வன் ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளா் சிவா, ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பின் கட்டமைப்பு பொறியாளா் செந்தில் பலவேச கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

போதைப்பொருள் பயன்பாட்டால் உடல், மன நலம், சமூக வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பேராசிரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா். போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.