வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கல்லூரி மாணவிக்கு தொந்தரவு: இளைஞரை கைது செய்த சிங்கப்பெண் படை

கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொடா்ந்து தொந்தரவு கொடுத்த சமையல்காரரை, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 12:25 am IST

கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொடா்ந்து தொந்தரவு கொடுத்த சமையல்காரரை, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் 31. சமையல் வேலை செய்து வரும் இவா், மனைவியுடனான கருத்து வேறுபாட்டால் விவாகரத்தாகி தனியாக வாழ்ந்து வருகிறாராம்.

இந்நிலையில், இவா் கல்லூரியில் படிக்கும் சிறுமியிடம், தன்னை காதலிக்க வலியுறுத்தி, தொடா்ந்து தொந்தரவு கொடுத்ததுடன், ஆபாச செய்கைகள் செய்து வந்துள்ளாா். இதுகுறித்து, அச்சிறுமியின் தந்தை, சிங்கப்பெண் அதிரடிப்படை இலவச அழைப்பான 1091-இல் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து செக்காரக்குடி கிராமத்துக்குச் சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளா் ஆரோக்கிய ஜென்சி தலைமையிலான போலீஸாா், சொக்கலிங்கத்தை கைது செய்து, தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.